வேதாகமத்தில் அதிக புத்தகங்களைச் சேர்க்ககூடிய வகையில் இருந்ததா?
தேவன் தம்முடைய வார்த்தையில் இன்னும் கூடுதலாக சேர்க்கும் வகையில் வெளிப்படுத்தியிருப்பதாக நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆதியாகமம் புத்தகத்தில் மனுக்குலத்தின் ஆரம்பத்தோடு வேதாகமம் தொடங்குகிறது பிறகு அது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் மனிதகுலத்தின் முடிவில் முடிகிறது என்பது நமக்குத் தெரியும். விசுவாசிகளாகிய நம்முடைய நன்மைக்காக, ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் தேவனுடைய சத்தியத்தோடு வல்லமையுள்ளவர்களாக இருக்கிறோம். இதை நாம் 2 தீமோத்தேயு 3:16-17-ல் அறிந்திருக்கிறோம், " வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது." மேலும் புத்தகங்கள் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டிருந்தால், இன்று நமக்கு இருக்கும் வேதாகமம் முழுமையானது இல்லை என்றும் அது கூறும் காரியங்கள் யாவும் பூரணமற்றவை என்றும் சொல்லுவதற்கு சமமாக இருக்கும். இது வெளிப்படுத்துதல் புத்தகத்திற்கு நேர...